Showing posts with label கணினித் தமிழ்ச் செய்திகள். Show all posts
Showing posts with label கணினித் தமிழ்ச் செய்திகள். Show all posts

Friday, October 30, 2015

அழகி (மென்பொருள்)




அழகி என்பது கணினியில் இந்திய மொழிகளின் எழுத்துக்களை தட்டெழுதவென, பா. விசுவநாதன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு இலவசமென்பொருளாகும். இது ஆரம்ப காலத்தில் தமிழ் மொழிக்கு மட்டும் பயன்பட்டது, தற்போது, இந்திசமஸ்கிருதம்தெலுங்குகன்னடம்மலையாளம்,மராத்திகுஜராத்திபெங்காலிபஞ்சாபி உள்ளிட்ட 13[1] மொழிகளிலும் இக்கருவியை பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம். த இந்து நாளிதழ் 2002-ம் ஆண்டு, இம்மென்பொருளை, “ஒப்பற்றது” (stand out) என்று குறிப்பிட்டுள்ளது.[2] ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய ஒலிவடிவைத் தரக்கூடிய ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புகள் தெரிவு செய்யப்பட்டு அத்தொகுப்புக்களைத் தட்டெழுத, முறையான எழுத்துக்கள் கணினியில் திரையில் தோன்றும் வகையில் இம்மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு, அழகியை உருவாக்கியதற்காக டிஜிட்டல் எம்பவர்மென்ட் பவுன்டேசன் வழங்கிய மாந்தன் விருது (Manthan Award), பா. விசுவநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. [3] அதே ஆண்டில், அழகி ஒரு சிறந்த வெற்றிக் கதை என்றுமைக்ரோசாப்டின், இந்திய மொழிகளுக்கான பாஷாஇந்தியா தளத்தில் தெரிவித்திருந்தது. [4]

அழகியின் சிறப்பம்சங்கள்

திரை அமைப்பு

அழகியில் இருதிரை அல்லது ஒரு திரை முறையைப் பயன்படுத்தும் வசதியுள்ளது. இருதிரை முறையில் மேற்புறமுள்ள திரையில் நாம் தட்டெழுதும் ஆங்கில எழுத்துக்களும், கீழ்ப்புறமுள்ள திரையில் அதற்கீடான தமிழ் எழுத்துக்களும் தோன்றும். ஒரு திரை முறையில் தமிழ் எழுத்துக்கள் மட்டும் தோன்றும். அழகியின் திரை திறந்ததும் அதில் சிறிய ஒரு அட்டவணை தோன்றுகிறது. புதிதாய் அழகியை உபயோகிப்போர்அதில் காணும் தமிழ் எழுத்துக்களுக்கீடான ஆங்கில எழுத்துக்களைத் தட்டி மிக எளிதில் தமிழைக் கணினியில் எழுதலாம். அவ்வாறு எழுதியதை மின்னஞ்சல் வழியே அனுப்பும் வசதி அழகியில் உள்ளது. தற்பொழுது நடைமுறையில் வந்துள்ள ஒருங்குறி (Unicode) வகை எழுத்துக்களில் தமிழை எழுதும் வசதி அழகி மென்பொருளில் உள்ளடக்கம் செய்யப் பட்டுள்ளது.

பயன்பாடு

அழகியின் துணையோடு அழகி தவிர்த்த கணினியின் பிற பயன்பாட்டு மென்பொருட்களிலும் தமிழை உள்ளிட முடியும். அழகி மென்பொருளை முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஒலிபெயர்ப்பு

ஸ்ரீமதி என்ற சொல்லைப் பெற, srimathi, sreemathi, shrimathi, shreemathi, srimadhi, shrimadhi எனப் பல்வேறு ஆங்கிலச் சொற்களின் தொகுப்புக்களை உபயோகப் படுத்தலாம். மஞ்சு, கஸ்தூரி, மஞ்சள், சிங்கம், சங்கு, நீங்க, நாங்க, விஸ்வம், பொய், நன்றி, கற்று முதலிய சொற்களை manju, manjaL, singam, sangu, neenga, naanga, visvam, poi, nandri, katru என்று இயல்பான எழுத்துக்களைத் தட்டிப் பெறலாம். ஆங்கிலத்தில் Mr என்று தட்ட ‘ஸ்ரீ’ என்ற எழுத்து கிடைக்கிறது. நீங்க என்பதை niinga என்றும் பெறலாம்.
எங்கே, அங்கே, இங்கே, வந்தே, தந்தே, பலனே, பலமே என வரும் சொற்களை enge, engae, ange, angae, inge, ingae, vanthe, vanthae, thanthe, thandhae, palane, palanae, balame, balamae என எளிதாகப் பெறலாம் engE, angE, ingE, vandhE, palanE, balamE என்று ஷிஃப்ட் உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை எனினும் இவ்வாறு ஷிஃப்ட் உபயோகித்தும் பெறலாம்.
ந, ன, ண எனும் எழுத்துக்களை முறையே nha, na, Na என்று எழுதிப் பெறலாம். இவற்றுள் ஒரு வரியின் முதல் எழுத்திலும் ந வருகையில் na என்று எழுதினால் போதுமானது பிற இடங்களில் மட்டும் nha உபயோகிக்க வேண்டும்.
ஒரு வரியின் முதல் எழுத்தாக ல, ள, ழ ஆகிய எழுத்துக்களை la, La, za அல்லது zha எனத்தட்டெழுதிப் பெறலாம். ர, ற என்பவற்றை முறையே ra, Ra என்று தட்டிப் பெறலாம். கற்ற, மற்ற, சிற்றூர், பெற்றோர், முற்றம், சுற்றம் போன்ற வார்த்தைகளை katra, matra, sitruur, petroar, mutrum, sutram என எளிதில் பெறலாம். kaRRa, maRRA, siRRuur, peRRoar, muRRam, suRRam என எழுத வேண்டியதில்லை, இவ்வாறு எழுதியும் பெறலாம்.
இது போல அனைத்து விதங்களிலும் கடினமான தூக்குவிசை (shift key) உபயோகித்துப் பெறக்கூடிய வார்த்தைகள் அனைத்தையும் தூக்குவிசை உபயோகிக்காமல் எளிய வழியில் பெறுவதுடன் தூக்குவிசை உபயோகித்துப் பெறும் பழக்கமுள்ளவர்கள் தொடர்ந்து அவ்விதமே பெறவும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
ச எனும் எழுத்தை sa, cha எனும் இரு வழிகளில் பெறலாம். சச்சரவு – sachcharavu, chachcharavu, சச்சிதானந்தம் – sachchithaanandham, chachchithanandham, சச்சின் – sachchin, chachchin

ஆங்கிலச் சொற்கள்

சஸ்பென்ஸ் – saspenS, சிஸ்டம் – sistam, சிஸ்டர்
முத்தைத்தரு பத்தித் திருநகை யத்திக்கிரை சத்திச்சரவண
muththaiththaru paththith thirunhagai yaththikkirai saththichcharavaNa
முக்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
mukthikkoru viththuk kurubara enavoathum
முக்கட்பரமர்க்குச்சுருதியின் முற்பட்டது கற்பித்திருவரு
mukkatparamarkkuchchuruthiyin muRpattathu kaRpiththiruvaru
முப்பத்து முவர்க்கத் தமரரு மடிபேண
muppaththu muvarkkath thamararu madipaeNa
திக்குளெட்டுக்கைந்துக்கமுற்றுத்திடுக்கிட்டலர
thikkuLettukkainthukkamutruththidukkittalara
மைக்கடற்குட்சரந்தைக்கவிட்டோர்க்கிடமாமதுர
maikkadaRkutcharanthaikkavittoarkkidamaamathura
இக்குமுற்றிக்கணுச்சற்றுவிட்டுத்தெரித்திட்டமுத்தைக்
ikkumutrikkaNuchchatruvittuththeriththittamuththaik
கொக்குமொக்கிக்கக்கிவிக்குமச்சோலைக்குறுங்குடியே
kokkumokkikkakkivikkumachchoalaikkuRungudiyae
எட்டெழுத்தைக்கருத்திற்குறித்திட்டு நித்தம் பரவும்
ettezuththaikkaruththiRkuRiththittu niththam paravum
சிட்டர்கட்குத்திருப் பொற்பதத்தைச் சிறக்கத்தருமவ்
sittargatkuththirup poRpathaththaich chiRakkaththarumav
வட்டநெட்டைப்பணி மெத்தையத்தர்க்கிடம் வாரிசைப்பொ
vattanhettaippaNi meththaiyarkkidam vaarisaippo
குட்டினத்துக்குலந்தத்துமுத்தீனும் குறுங்குடியே
kuttinaththukkulanthaththimuththiinum kuRungudiyae

உருவாக்க குழுமம்

பா. விசுவநாதன், என்னும் ஒரு மென்பொருள் வல்லுநரால் உருவாக்கப்பட கருவியாகும். 1999-களில் சரியானதொரு தட்டெழுத்து கருவி தமிழில் இல்லை. ஒரு சில தட்டெழுத்து கருவிகளிலிருந்தும் சரியான இடைமுகப்பு இல்லாமலிருந்தது. 2000-ம் ஆண்டில் விசுவநாதன், தன்னுடைய அழகி மென்பொருளை வெளியிட்டார். தன் மனைவியின் அழகான உள்ளத்தைப் பெருமிதப்படுத்தும் வகையில் தன் மென்பொருளுக்கு ‘அழகி’ என்று பெயரிட்[தொகு]
பல்வேறு தமிழ் இணையத்தளங்களும், மென்பொருட்களும், ஆவணங்களும், தமிழில் தட்டச்சு செய்ய அழகி மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர், அழகி மென்பொருளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுடைய வலைத்தளம், வலைப்பதிவு உள்ளிட்டவகைகளில் அழகி மென்பொருள் குறித்தும், அதற்கு நன்றி தெரிவித்தும் தகவலிட்டுள்ளனர்.[6] அதுமட்டுமின்றி, அழகி ஏராளமான ஒருங்குறி எழுத்துருக்களை இலவசமாக வழங்கி வருகிறது. [7], TSCII[8], TAB மற்றும் TAM தரவுகளும் இலவசமாக வழங்கி வருகிறது. பெரும்பாலான பயனர்கள் இம்மென்பொருளை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதை[9]தொடர்ந்து, இதனுடைய புகழும் வளர்ந்து வருகிறது.

அங்கீகாரமும் விருதுகளும்

  • 2006-ம் ஆண்டு இருதிரை தட்டெழுத்து கருவியை உருவாக்கியதற்காக பா. விசுவநாதனுக்கு மாந்தன் விருது ( Manthan Award) வழங்கப்பட்டது[10]
  • ஜூலை 2004-ல், சென்னை ஆன்லைன் இணையம் பா. விசுவநாதனை, அழகி மென்பொருளை உருவாக்கியதற்காக கணினி வல்லுநர் என்று பாராட்டியது[11]
  • நவம்பர் 2004-ல், நிலாச்சாரல் இணையமானது, விசுவநாதனை அழகி மெபொருளை உருவாக்கியதற்காக தமிழ் வளர்க்கும் அறிஞர் என்று பாராட்டியிருந்தது.[12]

இவற்றையும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Jump up Same words, many languages
  2. Jump up இராமச்சந்திரன், கே. (2002-06-26), “Input English, Output Tamil”த இந்து, archived from the original on 2010-07-05, பார்த்த நாள்: 2012-04-22
  3. Jump up Manthan-AIF Award ’06 > Award Winners > Azhagi, Digital Empowerment Foundation, பார்த்த நாள்: 2012-05-15
  4. Jump up Meet Mr. Vishwanathan, Bhashaindia.com, archived from the original on 2010-12-14, பார்த்த நாள்: 2012-05-14
  5. Jump up “Innovative, despite odds”. பார்த்த நாள்: 22 April 2012.
  6. Jump up Sundaram, Introduction and thanks to Azhagi“. பார்த்த நாள் 17 May 2012.
  7. Jump up 100s of FREE Tamil Fonts (Unicode, Tscii, TAB, TAM, etc. encodings)“. பார்த்த நாள் 17 May 2012.
  8. Jump up TSCII file Description“. TSCII. பார்த்த நாள் 17 May 2012.
  9. Jump up Any other tool like e-Kalappai for typing Tamil in all applications“. பார்த்த நாள் 17 May 2012.
  10. Jump up “Manthan-AIF Award ’06 > Award Winners”The Manthan Award. பார்த்த நாள்: 17 May 2012.
  11. Jump up “Computer Expert Vishwanathan”Chennaionline.com. பார்த்த நாள்: 17 May 2012.
  12. Jump up Thamizh Valarkkum Arignar“. பார்த்த நாள் 17 May 2012.

வெளி இணைப்புகள்

Viswanathan (a z h a g i . c o m)'s profile photo

GNU/Linux - குனு லினக்ஸ் -கட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...


Karbonn A12+ திறன்பேசியும் அதன் மின்கலமும்

என்னிடம் திறன்பேசி(Smartphone) இல்லை. சாதரண Samsung Guru E1200 மாடல் கைப்பேசியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். என் அம்மா, தம்பி, சித்தியெல்லாம் திறன்பேசி வாங்கிகொள்ளச் சொல்லி வற்புறுத்தினாலும் நான் வாங்கிக்கொள்ளவில்லை (என் சித்தி கொடுத்த பணத்தில்தான் இந்த சாம்சங் கைப்பேசியை வாங்கினேன்). அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று,ரிச்சர்ட் ஸ்டால்மனின் உரைகளையும், எழுத்துக்களையும் கேட்டதன், படித்ததன் விளைவு. இன்னொன்று, நிசப்தம் வா.மணிகண்டன் அவர்களின் கட்டுரை. நாமும் திறன்பேசி வாங்கினால் என்ன? என்ற ஆசை எனக்குள் தோன்றிய சமயத்தில்தான்,வா.மணிகண்டன் அவர்களின் கட்டுரையும் வெளிவந்தது. அந்த கட்டுரை திறன்பேசி தேவையில்லை என்று நெத்திப்பொட்டில் அடித்தது போலச் சென்னது.

தற்போது நான் பயன்படுத்தும் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட samsung கைப்பேசி
முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவைகளில் எனக்கு கணக்கு இல்லை.சமூகவலைதளங்கள் நம்முடைய நேரத்தை வீணடிப்பதோடு, நம்முடைய எழுத்துக்களையும், கருத்துக்களையும் சாக்கடைக்குள் எறிந்த கல்லாக மாற்றி விடுகிறது என்பது என்னுடைய கருத்து. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் அளவிற்கு என்னுடைய தேவைகள் இல்லை. நான் கேமும் விளையாட மாட்டேன். எப்போதாவது சுடோகு விளையாடுவேன். அது நான் வைத்திருக்கும் சாம்சங் குரு போனிலேயே இருக்கிறது. மேற்கண்ட விஷயங்களுக்காகத்தான் திறன்பேசி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இணையம் இல்லையென்றால் ஸ்மார்ட் வைத்திருப்பவர்கள் அதில் என்ன செய்வார்கள்? கேம்தான் விளையாடுவார்களா? என்றுகூட நான் நினைத்துப்பார்த்ததுண்டு. மேற்கண்ட எதையுமே நாம் செய்யவேண்டிய அவசியம் இல்லையெனும் போது, நமக்கு எதற்கு திறன்பேசியெல்லாம் என நினைத்து இன்று வரையிலும் திறன்பேசி வாங்கவேயில்லை.


என் அலுவலக நண்பர் ச.பிரபாகரன் அவர்கள் புதிதாக ஒரு திறன்பேசி வாங்கினார். அதனால் அவர் தான் ஏற்கனவே வைத்திருந்த பழைய Karbonn A12+ திறன்பேசியை, நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் கதிர் என்றுச் சொல்லி என்னிடம் கொடுத்துவிட்டார். 3G இணைய இணைப்பிற்காக ஏதாவது Dongle வாங்கலாமா? என்ற யோசனையில் நான் இருந்த போது பிரபாகரன் அவர்கள் தன்னுடைய ஸ்மார்ட் போனை என்னிடம் கொடுத்தது Dongle வாங்கும் செலவையும் குறைத்தது. நண்பருக்கு நன்றி.

இணையத்திற்கென தனியாக ஒரு சிம் அட்டையை Nokia 6300 மாடல் கைப்பேசியில் போட்டு 2G இணைப்பாக பயன்படுத்தி வந்தேன். இணையத்தை இனிமேல் இந்த திறன்பேசி மூலமாகவே அணுக்கிக்கொள்வோமே, 3G வசதியுடனும் இருக்கிறது என நினைத்து, Nokia 6300 கைப்பேசியில் இருந்த சிம் அட்டையை பிடுங்கி பிரபாகரன் அவர்கள் கொடுத்த திறன்பேசியில் சொருகினேன்.

அலுவலக நண்பர்களெல்லாம் வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி அதில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வந்தார்கள். கதிர் நீங்களும் வாட்ஸ் அப்புக்கு வாங்க, எனச் சொல்லி பிரபாகரன் அவர்கள்தான் வாட்ஸ் அப் செயலியை நிறுவிக்கொடுத்தார். நண்பர்கள் பகிரும் செய்தியை நான் படிப்பேனேயொழிய, இன்றுவரை அதில் ஒரு செய்தியைக்கூட நான் பகிர்ந்து கொண்டதே இல்லை. நண்பர்கள் வாட்ஸ் அப்பில் என்ன பகிரந்து கொண்டுள்ளார்கள்? எனப் பார்ப்போமே என்று எனக்கு எப்போதாவது தோன்றினால் அப்போது மட்டும் திறன்பேசியை ON செய்து வாட்ஸ் அப் செய்திகளைப் படிப்பேன். படித்துவிட்டு திறன்பேசியை OFF செய்து வைத்துவிடுவேன். இதுபோக விடுமுறை நாட்களில் அறையில் இருக்கும்போது 3G இணைய இணைப்பை பயன்படுத்துவேன் அவ்வளவுதான்.

இதுஒருபக்கம் இருக்க நண்பர் ச.பிரபாகரன் அவர்கள் கொடுத்த Korbonn A12+ திறன்பேசியின் மின்கலம்(Battery) கொஞ்சம் கொஞ்சமாக உப்ப ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களிலேயே மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் தன்மையை மின்கலம் முற்றிலுமாகவே இழந்தது. 5 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது எனும் அளவிற்கு நிலையை எட்டியது. திறன்பேசியில் மாட்டவே முடியாதபடியும் உப்பிவிட்டது. ஆகையால் திறன்பேசியை தனியாகவும், மின்கலமை தனியாகவும் பிரித்தே வைத்திருந்தேன். கதிர் புதுசா ஒரு மின்கலம் வாங்கி மாட்டுங்க இல்லையென்றால் உப்பியிருக்கிற மின்கலம் வெடித்தாலும், வெடித்துவிடும் என நண்பர்கள் எச்சரித்து அறிவுறுத்தினார்கள். இது எனக்கு மேலும் பயத்தை உண்டுபண்ணியது. சரி புது மின்கலம் வாங்கிக்கொள்வோம் என நினைத்து, பழைய மின்கலத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் விசினேன்.



வீசும்போது எனக்குத் தெரியாது Karbonn A12+ திறன்பேசிக்கு மின்கலம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று. அதன்பிறகு மின்கலம் வாங்கும் படலம் தொடங்கியது. சென்னையில் முகப்பேர்  கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருக்கும் கடைகளில் நானும் எனது  கல்லூரிகால நண்பர் கார்த்தியும் ஒவ்வொரு கடையாகச் சென்று விசாரித்தோம் எந்த கடையிலும் கிடைக்கவில்லை. ஒருகடைக்காரர், சார் நானும் நீங்கதேடிக்கிட்டு இருக்கிற மின்கலத்தைத்தான் சார் தேடிக்கிட்டு இருக்கேன் இன்னும் கிடைக்கல சார், இந்த திறன்பேசிக்கு மின்கலம் தேடி அலையுறதுக்குப் பதிலா நீங்க புதிசா ஒரு திறன்பேசியையே வாங்கியிரலாம் சார் என கூறினார். முகப்பேர் கிழக்கில் ஒருக்கடைக்காரர் 350 ரூபாய் கொடுங்கசார் ஆர்டர் பண்ணி வாங்கிதர்றேன். ஆனால் ஒரிஜினல் மின்கலம் கிடைக்காது, டூப்ளிகேட்தான் சார் வரும் எனச்சொன்னார். கதிர் விலை அதிகமாக தெரிகிறது, வேறு எங்காவது தேடி வாங்கிக்கொள்வோம் வா எனச் சொல்லி கார்த்தி அழைத்து வந்துவிட்டான். அலைந்து திரிஞ்சப்பிறகு இவரிடமே ஆர்டர் கொடுத்துவிடுவுமோ என யோசித்தோம் அது வேறு கதை.

அலுவலக நண்பர்களிடம் நடந்ததைக் கூறினேன். நீங்க ரிச்சி ஸ் ரீட் போயிட்டு வாங்க கதிர் அங்கு நிச்சயம் மின்கலம் கிடைக்கும் என்று கூறினார்கள். எனக்கு ஞாயிறு மட்டும்தான் விடுமுறை ஆகையால் அங்கு செல்வதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. இதற்கு என்னதான் வழி என யோசித்துக்கொண்டேயிருந்தேன்.

இதற்கிடையில் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் தம்பி வினோத்குமார், அவருடைய நண்பர் செல்போன் கடை வைத்திருப்பதாக கூறினார். அவரிடமும் விசாரித்தோம். அவரும் மின்கலம் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டார். கடல்லேயே இல்லையாம் எனும் வடிவேல் நகைச்சுவைத்தான் என் ஞாபகத்திற்கு வந்துபோனது.

இறுதியாக, இணையத்தில் தேடிப்பாரப்போமே என முடிவு செய்து இணையத்தில் தேடினோம். ebayamazonflipkart தளங்களில் Out of stock என வந்தது. ERDநிறுவனத்தின் தளத்தில் தேடினோம் அதிலும் Out of stock என வந்தது. Shopcluesதளத்தில் மின்கலம் இருப்பதாகச் சொல்லி காண்பித்தார்கள், ஆர்டர் செய்தோம். எங்களிடம் நீங்கள் ஆர்டர் செய்த மின்கலம் இல்லை, 20 நாட்கள் டைம் கொடுங்கள், வேறு இடத்திலிருந்து வாங்கி அனுப்பி வைக்கிறோம் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். மின்கலம் வேண்டாம் எனக்கூறி அவர்களுக்கு பதில் அனுப்பி வைத்தேன். Phabletkart தளத்தில் ஆர்டர் செய்தோம் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. இந்நிலையில்தான், ERD தளத்தில் micromax Q50/Q34 மாடல் மின்கலம்கள் Karbonn A12+ க்கு பொருத்தமாக இருக்கும் என போட்டிருந்தார்கள். அதனால் micromax Q50/Q34 திறன்பேசிகளுக்கான மின்கலங்களைத் தேடினோம். அதையாவது வாங்கி மாட்டிவிடுவுமே எனும் ஆசைதான். ebay தளத்தில் சில micromax Q50/Q34 திறன்பேசிகளுக்கான மின்கலன்கள் கிடைத்தது. நேர், எதிர் மின்முனைகளில் மாற்றம் இருப்பதுபோலத் தோன்றுகிறது எனச் சொல்லி கடைசியில் அதையும் வாங்கவில்லை.

ஒரு போனுக்கு மின்கலம் வாங்குறது இவ்வளவு கஷ்டமான காரியமா? என நினைத்துக்கொண்டே, மின்கலம் இல்லாமல் செல்போனை பயன்படுத்த முடியாதா? என இணையத்தில் தேடிப்பார்த்தேன். instructable தளத்தில் ஒரு கட்டுரை இருந்தது. அதைப் படித்து நன்கு உள்வாங்கிக்கொண்டேன், தேடிபார்ப்போம் எதுவும் கிடைக்கவில்லையென்றால் இதுல சொல்லியிருக்கிறது மாதிரி செய்துவிட வேண்டியதுதான் என முடிவு செய்து விட்டு மின்கலம் தேடுவதை சில வாரங்களுக்கு ஒத்திவைத்தேன்.

அதன்பிறகு மறுபடியும் மின்கலத்தை தேடும் படலத்தைத் தொடங்கினேன். அப்பொழுது mAh என்றால் என்ன? என்பது பற்றி இணையத்தில் சில கட்டுரைகளைப் படித்தேன். அவ்வாறு படித்துக்கொண்டிருக்கும்போது, அந்த தளத்தில் சமமான voltage உடைய, அதிகமான mAh அளவுகொண்ட மின்கலத்தை திறன்பேசிக்கு பயன்படுத்தலாமா? என ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். பயன்படுத்தலாம் என பதில் கூறியிருந்தார்கள். இந்த பதில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது.

நண்பர் பிரபாகரன் கொடுத்த Karbonn A12+ திறன்பேசிக்கான மின்கலம் 3.7 voltage, 1400mAh அளவுள்ளது. ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. என்னிடம் உதிரியாக Nokia 6300 மற்றும் Samsung போன்கள் இருந்தது. அந்த இரண்டு போன்களின் மின்கலம்களும் 3.7 voltage 800mAh அளவுள்ள மின்கலன்கள். அதாவது சம அளவுடைய voltage, குறைவான அளவு கொண்ட mAh. நாம ஏன் இந்த இரண்டு போன்களின் மின்கலன்களில் எதையாவது ஒன்றை இதற்கு பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று தோன்றியது? Karbonn A12+ மின்கலமும், என்னிடம் இருந்த இரண்டு மின்கலன்களும் 3.7 voltage கொண்டது. mAh தான் வேறுவேறு. மறுபடியும் ஒரு சந்தேகம் வந்தது 1400mAh மின்கலத்திற்கு பதிலாக 800mAh அளவுள்ள மின்கலத்தைப் பயன்படுத்தலாமா? என்று. இது தொடர்பாக இணையத்தில் தேடிப்பார்த்தேன். தாரளமாக பயன்படுத்தலாம் என பதில் கிடைத்தது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு அளவு voltage கள் கொண்ட மின்கலங்களை பயன்படுத்தக்கூடாது. 3.7 மின்கலத்திற்குப் பதிலாக அதைவிட அதிகமான voltage உடைய மின்கலங்களை பயன்படுத்தக்கூடாது. அப்படி மீறி பயன்படுத்தினால் திறன்பேசியின் mother board எரிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

இங்கு நான் ஒரு செய்தியை சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். செல்போனின் மின்கலமில் இருக்கும் mAh என்பது, எவ்வளவு நேரத்திற்கு போனுக்கு மின்சாரத்தைக் கொடுக்கமுடியும் என்பதைக்குறிக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 100mAh. உதாரணமாக 800mAh மின்கலம் என்றால் 8-மணி நேரமும், 1400mAh என்றால் 14 மணிநேரமும் தாக்கு பிடிக்கும். இதற்கு, தண்ணீர் தொட்டியை உதாரணமாக எடுத்துக்கொண்டீர்களேயானால் voltage, mAh இரண்டின் வித்தியாசம் புரியும். அதாவது, தண்ணீர் எவ்வளவு அழுத்தத்துடன் வெளியேறும் என்பது voltage, எத்தனை லிட்டர் தண்ணீரை தொட்டியால் சேமித்து வைக்க முடியும் என்பது mAh. அடுத்து பொதுவாக மின்கலம்யென்றாலே +(நேர்), -(எதிர்) என்று இரண்டு முனைகள்தான் இருக்கும். ஆனால் கைப்பேசி மற்றும் திறன்பேசிகளின் மின்கலன்களில் மூன்று முனைகள் இருக்கிறது. அது என்னவென்றால் ஒன்று நேர்மின்முனை, இரண்டாவது எதிர்மின்முனை, மூன்றாவதாக இருப்பது மின்கலத்தின் வெப்பத்தை தெரிந்துகொள்ள. அதாவது நடுவில் இருக்கும் முனை. வலது மற்றும் இடது புறமாக இருப்பது நேர், எதிர் முனைகள்.

சரி, Korbonn A12+ திறன்பேசிக்கு மாற்று வழியில் மின்கலம்யை எப்படி பொருத்துவது என கண்டுபிடிச்சாச்சு, அதற்கு போதுமான தகவல்களையும் திரட்டியாச்சு. அப்புறம் என்ன Operation ஐ ஆரம்பித்து விட வேண்டியதுதானே. எல்லா தகவல்களையும் திரட்டி வைத்துக்கொண்டு ஒருநாள் Operation ஐ ஆரம்பித்தேன்.

நான் வேலை பார்க்கும் நிறுவனம் Embedded அடிப்படையிலான நிறுவனம், ஆகையால் soldering iron, glue gun, wire cutter, multimeter, insulation tape, wire என அனைத்தும் அலுவலகத்தில் இருக்கும். எனக்கு சின்னவயசுலேயிருந்தே electrician வேலைகள் தெரியும்(விளம்பரம்: எங்க வீட்டிற்கான wiring வேலைகளை நான்தான் செய்தேனா பார்த்துக்கொள்ளுங்களேன்.), என்பதால் soldering செய்வது, multimeter ஐ வைத்து சோதித்துப் பார்ப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் ஓரளவிற்கு ஞானம் உண்டு. மின்கலம் Operation செய்ய இந்த திறமைகள் உதவி புரிந்தன.

முதலில் சாம்சங் மின்கலத்தைத் தான் பயன்படுத்திப் பார்த்தேன் வேலை செய்யவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. விட்டுவிட்டேன். மனம் தளர்ந்துவிடாமல் Nokia வில் இருந்த ERD மின்கலம்யை பயன்படுத்திப் பார்த்தேன். கிடைத்தது வெற்றி!




இதுபோன்ற நிலைமை உங்களுக்கும் வந்தால், மேலே சொன்ன மாற்று வழிகளில் முயற்சிக்கலாம். தயவுசெய்து Electronics ஐ பற்றிய அடிப்படை தெரியாதவர்கள் இதை செய்து பார்க்க வேண்டாம். Electronics தெரிந்த உங்கள் நண்பர்களிடம் கொடுத்து செய்யச்சொல்லுங்கள். +, - இரண்டும் short ஆகும் பட்சத்தில் மின்கலம் வெடித்துவிடும். உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம். கவனம் தேவை.

நீங்கள் ஏன் கைப்பேசியை பயன்படுத்துவதில்லை? எனும் கேள்விக்கு Richard Stallman அவர்கள் கூறிய பதில்
Because cell phones can track my location or my conversation with anyone. Most cellular phones, even if they are not smart phones, do have a processor running software and that (proprietary) software is malware, because it will send information about its users’ locations on remote command — and it has a back-door, so it can be remotely converted into a listening device. Almost all software has bugs — but this software is itself a bug.  

மேற்கோள்கள்:
http://opensourceforu.efytimes.com/2012/03/rms-interview-richard-stallman-freedom-android-amazon-facebook-steve-jobs/

Friday, November 7, 2014

ரெங்கராஜனுக்கு சுஜாதா ! லட்சுமணனுக்கு உலகம்மா !



குழந்தை  எழுத்தாளர்  அழ.  வள்ளியப்பாவைப்  போலாக  வேண்டுமென்பது அவரது  ஆசை !

யார்  இவர் ?  காஸ்  விநியோகம்  அவருக்குச்  சோறு  போடுகின்றது.  பத்தாம் வகுப்பில்  தோல்வியடைந்தவர் !

நாகர்கோவிலை  அடுத்த  கோதை  கிராமம்  அவருக்குச்  சொந்த  ஊர் !  எளிய குடும்பத்தில்  பிறந்தவர்.  உடல் நலக்  குறைவால்  வேலைக்குச்  செல்ல முடியாத  அப்பா ! இவருக்கு இரண்டு  தங்கையர்.  ஒரு  தம்பி.  ஏழ்மை காரணமாக  ஐந்தாம்  வகுப்பிலிருந்தே  விடுமுறை  நாள்களில்  நெசவுத் தொழிலுக்குச்  செல்வது  வழக்கம். வறுமை  தந்த  மன  அழுத்தத்தால்  பத்தாம் வகுப்பில்  தேர்ச்சி  பெற  இயலாமற்  போனது. படிப்புக்கு முழுக்குப்ப் போட்டார்.

கோட்டாறு  கடைகளில்  சரக்குப்போடும்  வேலையில்  துவங்கியது  இவரது வாழ்க்கை !  தற்போது  எச்.பி.  நிறுவனத்தில்  காஸ்  ஊழியராக  வேலை பார்த்து  வருகின்றார்.

தொடர்ந்து  பள்ளியில்  படிக்க  முடியாத  வேதனைக்கு  நூலகங்கள்   அடைக்கலமாகத்  திகழ்ந்தன.

இராமலிங்க  அடிகளார்,  கண்ணதாசன்,  குழந்தக்  கவிஞர்  அழ. வள்ளியப்பா ஆகியோரது  படைப்புகள்  பரவசமூட்டின, இவருக்கு ! தமிழ்  மொழியின்பாற்  நாட்டம்  அதிகரித்தது.

”தமிழ்வழிப்  பள்ளியில்  குழந்தைகளைச்  சேருங்கள்” என்று  நண்பர்களிடம்  வற்புறுத்தியபோது  “பைத்தியக்காரன்”  பட்டம்தான்  கிடைத்தது.

நன்னெறிகளையும்,  ஒழுக்கத்தையும்  தாய்மொழியில்  கொண்டு  சேர்க்கும் ஆவல்  எழுதத்  தூண்டியது.

கண்மணிகளுக்கான  கதைகள்,  குழந்தைகளுக்கான  குரு  சிஷ்யக்  கதைகள், விலங்குகள்  கூறும்  விசித்திரக்  கதைகள்,  நல்ல  நல்ல  நெடுங்கதைகள்  உள்பட  17  கதைத்  தொகுப்ப்புகளை  எழுதி  வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில்  பிறந்த  ஊரின் பெயரையும்  சேர்த்து  கோதை  சிவக்கன்ணன் என்ற  பெயரில்  எழுதத்  துவங்கினார்.

இவருக்குப்  பல்லாற்றானும்  துணைநிற்கும்  இவரது  துணைவியார் உலகம்மாள்.  எனவே, தற்போது  “உலகம்மா”  என்னும்  பெயரில்  எழுதி வருகின்றார்.

ஸ்ரீரெங்கம்  ரெங்கராஜன்  தன்  மனைவி  சுஜாதாவின்  பெயரில்  எழுதியதை நினைவு  கொண்டதாலே  இப்பதிவுக்கு  மேற்படித்  தலைப்பு !

தகவல்  உதவி :- என்.சுவாமிநாதன், தி இந்து, வெள்ளி, நவம்பர், 7, 2014

Monday, October 27, 2014

மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம் - கரந்தை ஜெயகுமார்


மதுரை மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் விருப்பப்படி, திருமலை நாயக்கர் மகாலைக் கட்டிட, மண் வளம் வாய்ந்த ஓர் இடத்தினைத் தேர்வு செய்து, அங்கு, 305 மீட்டர் நீளமாகவும், 290 மீட்டர் அகலமாகவும் தோண்டித் தோண்டி மண் எடுத்துச் சுட்டு, செங்கல் கற்களை உருவாக்கினர்.

      நாயக்கர் மகாலும் அழகுற கம்பீரமாய் உருவானது. மண் தோண்டி எடுத்த இடத்தில், பாங்குற ஒரு குளமும் உருவானது. இக்குளம்தான், வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளம்

       இத்தெப்பக் குளத்தின் நடுவே ஓர் மைய மண்டபம். மண்டபத்தில் விநாயகர். மண்டபத்தைச் சுற்றிலும் அழகிய தோட்டம். தெப்பக் குளத்தின் தோற்றமே, காண்பவர் கண்களைக் கொள்ளை கொள்ளும்.

      மாரியம்மன் தெப்பக் குளத்தின் கரையில், அழகுற காட்சியளிக்கிறது,
கீதா நடன கோபால நாயகி மந்திர்.


நாள் 26.10.2014 ஞாயிற்றுக் கிழமை. காலை 9.00 மணி. சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், நான், எனது மனைவி, மகள் நால்வரும் அரங்கினுள் நுழைகிறோம்.

    அரங்கமே பரபரப்பில் மூழ்கி இருந்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. தமிழ் நாடு முழுமையும் இருந்தும், கடல் கடந்தும் பதிவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

     ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு, கரம் பற்றி, எழுப்பிய உற்சாகக் குரல் ஒலி, அரங்கம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

     முகம் நோக்காது இதுநாள் வரை பழகிய உறவுகள், முகங் கண்டு, அகம் மகிழ, சிரித்து மகிழும், இக்காட்சியைக் காண, கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்.

     அக்கொடுப்பினை, இவ்வாண்டு எனக்குக் கிடைத்தது.


மதுரை, தீதும் நன்றும் பிறர் தர வாரா, ரமணி ஐயாவை சந்திக்க வேண்டும் என்பது எனது நெடு நாள் கனவு. இதோ முதலாவது ஆளாக நிற்கிறார். கரம் பற்றி நலம் விசாரித்தேன்.


     தேவ கோட்டையில் பிறந்து, அபுதாபியில் பணியாற்றும், பன் மொழி வித்தகர் கில்லர்கி, முகத்தினையே மறைக்கும் மீசையுடன், முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, இரு கரம் நீட்டி, இழுத்து அணைக்கிறார். வாருங்கள் நண்பரே, வாருங்கள் நண்பரே என மனம் மகிழ அழைக்கிறார்.

     இதோ மின்னல் வரிகள் பால கணேஷ். தமிழ் மணத்தில், முதலிடத்தை, நிலையாய் பிடித்து வைத்துப் பாதுகாக்கும், ஜோக்காளி பகவான்ஜி.

     வலைப் பூவில் நான், கணித மேதை சீனிவாச இராமானுஜன் தொடரினை எழுதிய போது, அன்போடு அழைத்துப் பேசிப், பாராட்டி, தமிழ் மணம் வாக்குப் பட்டையினை, வலையில் இணைத்துக் கொடுத்த, மூங்கில் காற்று திரு டி.என்.முரளிதரன்.

     தனது வயதையும் பொருட்படுத்தாது, சிறு குழந்தைபோல், திரு ஜி.எம். பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள்.

     வங்கிப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், தேனீ போல் சுறு சுறுப்பாய், சுழன்று, சுழன்று படமெடுத்து, பதிவில் பாங்குற இணைக்கும், திருச்சியின் மூத்த பதிவர், எனது எண்ணங்கள் திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள்.
  



கையில் நீண்ட புகைப் பட கருவியுடன், திரையுலக ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா போல், தருமி அவர்கள்.
     

கவிதைகளால் மனங்களைக் கொள்ளையடிக்கும், சிவகுமாரன் கவிதைகள் திரு சிவ குமார் அவர்கள்.



உலகம் சுற்றும் வாலிபன்
கடற் பயணங்கள் சுரேஷ் அவர்கள்
    



அநீதி கண்ட இடத்து வெகுண்டு எழும், வேல் வெற்றியின் திரு அ. வேல் முருகன் அவர்கள்.

      தனது தனித்துவமான நடையால், மனதைக் கவர்ந்திழுத்துச் சொக்க வைக்கும், சிட்டுக் குருவி திரு விமலன் அவர்கள்.


முக நூலில் உலகையே கலக்கும்,
ஸ்ரீவில்லிப் புத்தூர்
திரு இரத்தினவேல் நடராஜன் அவர்கள்

அரங்கத்து வாசலில் ஒரு வேன் வந்து நிற்க, ஒட்டு மொத்த, புதுக் கோட்டைப் பதிவர் உலகமும், முழுதாய் வந்து இறங்கியது.

       வளரும் கவிதை திரு கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தலைமையில், மலர்தரு கஸ்தூரி ரங்கன், மகிழ்நிறை சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன், வேலுநாச்சியார் சகோதரி மு. கீதா, நண்பர் மகா சங்கர், சகோதரி கல்வியாளர் ஜெய லட்சுமி, சகோதரி மாலதி என புதுக் கோட்டைப் பதிவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், அனைவரையும் காண, அனைவருடனும் பேச, இரு கண்களும், ஒரே ஒரு வாயும் போதவே இல்லை. அவற்றைக் கடன் வாங்கவும் வழியேயில்லை. தவித்தே போய்விட்டேன்.

     ஒவ்வொரு பதிவராய் மேடையேறி அறிமுகம் செய்து முடிக்கவே, அரை நாள் கடந்து விட்டது., இடையில் நாவினிக்க, உடல் குளிர ஓர் ஜிகர்தண்டா.

     பிற்பகல் நிகழ்ச்சியாக, குடந்தையூர் சரவணன் அவர்களின் இயக்கத்தில் தயரான, ஓர் குறும் படம்.
சில நொடி சிநேகம்

     இக்குறும் படம் ஓடியதென்னவோ, ஏழே ஏழு நிமிடங்கள்தான். ஆனால் அதன் தாக்கம் விலகத்தான் நீண்ட நேரம் பிடித்தது.

குடந்தையூர் சரவணன் அவர்கள்,
எதிர்காலத்தில், திரையுலகில்
ஓர் நிரந்தர இடத்தினை
எட்டிப் பிடிப்பார் என்பது உறுதி.

வாழ்த்துக்கள் நண்பரே.

     நண்பர் தில்லையகத்து துளசிதரன், கோவை ஆவி, கரை சேரா அலை அரசன் மூவரும், ஏதோ நீண்ட கால அனுபவமிக்க நடிகர்கள் போல், இயல்பான நடிப்பால் உள்ளம் கவர்ந்தனர்.

வாழ்த்துக்கள் நண்ப, நடிகர்களே.

அடுத்த நிகழ்வாக, நூல்கள் வெளியீட்டு விழா.

கரந்தை மாமனிதர்கள்

    தமிழ் வலைப் பதிவர்களின் திருவிழா, மதுரையில் நடைபெற விருக்கின்றது, என்ற செய்தியினை அறிந்த மறு நிமிடமே, வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். எனது நூல் ஒன்றினை வெளியிட விரும்புகிறேன் என்றேன். மகிழ்ச்சி, மகிழ்ச்சி வெளியிடுங்கள் என்றார்.

    அதன் பின்னரே, என்ன வெளியிடலாம் என்று யோசித்தேன். வலைப் பதிவுத் திருவிழாவிற்கென்றே உருவான நூல்தான கரந்தை மாமனிதர்கள்.
     



பி.எஸ்.என்.எல். தொழிற் சங்க, மதுரை மாவட்டச் செயலாளர், மனித நேயப் பண்பாளர் திரு எஸ். சூரியன் அவர்கள், தனது பல்வேறு அலுவலகப் பணிகளுக்கு இடையிலும், பல்வேறு தொழிற் சங்க அலுவல்களுக்கு இடையிலும், அரை நாள் நேரம் ஒதுக்கி, மன மகிழ்ந்து, அரங்கிற்கு வருகை தந்து, நூலினை வெளியிட்டு, வாழ்த்தி மகிழ்ந்தார்.

     வலைப் பூ உலகிற்கு, என்னைக் கரம்  பிடித்து இழுத்து வந்து, வழி காட்டிய, நெறி படுத்திய, சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், முதற் படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.

      இந்த எளியேனின் மீது, அளவு கடந்த அன்பு வைத்துள்ள, கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள், கரந்தை மாமனிதர்களின் முகப்பு அட்டையினை, மின்னஞ்சல் வழி பெற்று, மேடையில் வெளியிடுவதற்கான, புத்தக மாதிரியினை, பெரிய அளவில், தயாரிக்கச் செய்து வழங்கி மகிழ்ந்தார்.

மதுரை எஸ்.சூரியன் அவர்களுக்கும்,
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும்
கவிஞர் நா.முத்து நிலவன் அவர்களுக்கும்
இருகரம் கூப்பி,
என் நெஞ்சார்ந்த
நன்றியினைத்
தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.


தேன் மதுரத் தமிழ்
சகோதரி கிரேஸ் பிரதீபா அவர்களின்,
துளிர் விடும் விதைகள்
வேலுநாச்சியார்
சகோதரி மு.கீதா அவர்களின்
ஒரு கோப்பை மனிதம்
சட்டப் பார்வை
திரு பி.ஆர்.ஜெயராமன் அவர்களின்
நல்ல எழுதுங்க... நல்லதையே எழுதுங்க

என புத்தம் புது நூல்கள், அடுத்தடுத்து வெளியிடப் பெற்றன.

    வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், நன்றி கூற வலைப் பதிவர் விழா சிறப்புடன் நிறைவுற்றது.

     என்ன, விழா அதற்குள் நிறைவு பெற்று விட்டதா? மணி ஐந்தாகி விட்டதா? அனைவருமே, நம்பாமல், தங்கள் கை கடிகாரத்தினை மீண்டும், மீண்டும் பார்த்து வியப்படைந்தனர்.

     காலை முதல் மாலை வரை, ஒரு பதிவர் கூட அரங்கை விட்டு வெளியே செல்லாமல், விழாவில் மனமகிழ்வோடு கலந்து கொண்டதே,
இவ்வாண்டின் பதிவர் திருவிழா
வெற்றி    வெற்றி    வெற்றி
என்பதை பறைசாற்றியது.

     ஒரு நாள் பதிவர் திரு விழா சிறப்புடன் அரங்கேற, பல மாதங்கள் அயராது பாடுபட்ட, தங்களின் சொந்தப் பணிகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு,
முழு மூச்சாய் களமிறங்கிச்
செயலாற்றி
சாதித்துக் காட்டிய
தமிழ்வாசி பிரகாஷ்
வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்
பகவான் ஜி
தமிழன் கோவிந்தராஜ்
மதுரை சரணவன்

நிகழ்ச்சியினைத் தொய்வின்றித் தொகுத்து வழங்கிய
மகேந்திரன் பன்னீர்செல்வம்
தீபா நாகராணி
மற்றும்
இவர்களை,
தங்களது நல் அனுபவத்தால், நல் வழி காட்டி இயங்கிய
அன்பின் சீனா
தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி
அவர்களுக்கும்,
மனமார்ந்த நன்றியினை
வலைப் பூ நண்பர்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்து மகிழ்கின்றேன்.

இவ்விழா வெற்றி பெற, பால மாதங்கள்
அலைந்து, அலைந்து
சிறித இளைத்தே போய்விட்ட
தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கு
மீண்டும் ஒரு முறை நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

சாதித்துவிட்டீர்கள் நண்பர்களே.