Friday, November 13, 2015

சேந்தன் தமிழ் - வடமொழி - தமிழ்ச்சொல் அகராதி - பாம்பன் சுவாமிகள் -திசம்பர் 1906

 

சேந்தன் துணை


செவ்வேள்  துணை




அமைதி அம்பது என்னும்

சேந்தன்  செந்தமிழ்

இயற்றியவர்

பாம்பன்

ஸ்ரீமத் - குமர குருதாச  சுவாமிகள்

இதன்  முதற்பதிப்பிற்கு  ஆசிரியர்  இயற்றிய

முன்னுரையின்  ஒரு பகுதி  டிசம்பர் 1906

********************************************************



வடமொழி  யொன்றையே  கற்று  அதனையே  வதந்து  கூறுநராயுள்ளாருட்  சிலர் - ) ஸம்ஸ்க்ருதம் )  சமற்கிருதமெனும்  வடமொழியிலிருந்தே
(  த்ராவிடம் )  திராவிடமெனுந்  தென்மொழி  யுண்டாயிற்  றென்றும்,  அதனால்  வடமொழியே  தாய்மொழி  யென்றும்,  ( தேவபாஷை )  கடவுண்  மொழி யென்றுங்  கூறுதல்  இவ்வையகத்திலுண்டு.  அவரெல்லாம்  - தமிழொன்றையே  விதந்து  கூறுநருட்சிலர், எவ்வெத்  தென்மொழி யெவ்யெவ்  வடமொழி  யிலிருந்துண்டாயின  வென்று  கூற இயைகின்றனவோ  அவ்வத்  தென்மொழியிலிருந்தே  அவ்வவ்  வடமொழி யுண்டாயின;  அவை - பெயர்,  வினை,  இடை,  உரியெனு  நாற்றிறாப்
(பகாப்பதம் )  பிரியா  மொழியும்  பொருள்,  இடம்,  பொழுது,  சினை,  பண்பு தொழிலெனுமாறுங்  கொண்டு  வரு  (  பகுபதம் ) பிரிமொழியுமாம்.  வடமொழி முதனிலைகளின்  பொருள்கள்  எப்படி  யிடுகுறியாயமந்துளவோ அப்படித்தான்  தமிழ்ப்  பிரிமொழி  முன்னிலைகளுக்கும்,  பிரியா மொழியாகும்.  இடுகுறிப்  பெயர்களுக்கும்  பொருள்களமைந்துள  வெனும் ஆற்றானும்,  தேவியாகியா  தாய்க்கு  உவப்பாயுள்ள  வடமொழிபோல,   அத்தேவியை  நீங்காத  தேவனாகிய  தந்தைக்கும்  உவப்பாய்  புதுமை  காட்டி நிற்பது  தென்மொழியெனும்  ஆற்றானும்  தென்மொழி  தாய்மொழி  தாய் மொழியுந்  தந்தை மொழியுமா  மென்றும்,  குறைவில்  ( அகஸ்த்யர் ) குறுமுனிவர்க்கு  முக்கட்  கடவுளும்  முருகப்  பெருமானும்  அழகெலா மமைய  வுணர்த்த  நின்ற  வொன்றாய்,  எஞ்ஞான்று  தென்னாடுண்டாயதோ வஞ்ஞான்றே  ஆண்டுப்  பயில  வமைத்து  பரந்துளதாய்த்  திகழுந் தென்மொழியான  தொன்மொழியான  கடவுண்  மொழியே  யாமென்றுங் கூறுதல்  கூடு  மென்பதை  யுணராதவராவர்.

*****************
 
சேந்தன்  செந்தமிழ்ப் புலன்  வனப்பு  ( இயற்செலல்லானியன்ற பொருட்டொன்றக்  கூறல். )  ”தெளிவு  புலனே  தெருட்சி  போதம் “ எனும் பிங்கலத்தைக்  கூற்றின்படி.  பொலன் - அவிவாலியற் சொல்லெனவே  கொளக்கிடப்பதாம்.

அ  -  ( நகரத்தின் வழிவருமிதன் பொருள் )  அன்மை,  இன்மை,  வேற்றுமை,  குறை,  பொறையின்மை, பகயென  அறுவகைப்படும்.

அகங்காரம்,  அகந்தை,  ஆங்காரம்  =  அஹங்காரம்  =  நானெனுஞ்  செருக்கு

அகசு  =  அஹஸ்  =  பகற்பொழுது

அகண்டம் -  அகண்டம்  =  எல்லாம்

அகத்தியன் -  அகஸ்த்யன்  = குறுவுருவன்  ( முத்தமிழ்  முனிவன் )

அகமம்  -அகமம் =  மரம்

அகம்  =மலை,  மரம்.  அதம்  =  மறம் ( தீவினை )

இவ்வாறு  மேலும்  93  சொற்களுக்குத்  தமிழில் பொருள்  கூறப்பட்டுள்ளன.

மேலும் 124 பக்கங்கள்  தொடர்கின்றன.

சேந்தன்  என்பதற்குச்  செவ்வேள்  என்று பொருள். ( முருகன் )

கிரியா  நவீன அகராதியில் சேந்தன்  இடம்பெறவில்லலை

சேந்த என்ற  சொல் மட்டும் இடம்பெற்றிள்ளது.  இதற்கு  இறைக்க  என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

பாம்பன் சுவாமிகள் குறிப்பிடும் தமிழ்ச் சொற்கள் அனைத்தும் தற்போது நடைமுறையில் பயன்படுத்துவதாகத்  தெரியவில்லை.

அவற்றையெல்லாம்  பயன்படுத்துதல் வேண்டும்.  அவை பயன்படுத்தப்பட்டால்  தமிழுக்குப்  புதிய  சொற்கள்  கண்டுபிடிக்க  வேண்டியவற்றில் குறைந்தபட்சம் ஆயிரமாவது குறையக்கூடும்.  

                                                                      ************


1906-க்குப்பின்  1999 -இல் இரண்டாம்  பதிப்பு  வந்துள்ளது.

பதிப்பித்தோர் :-

அழகு  பதிப்பகம்,  
20, ஆசிரியர்  சங்கக்  குடியிருப்பு,  வில்லிவாக்கம்,
சென்னை-600049.
Gomathinayagam
044 - 26502086
------------------
9444191256
-----------------
pambanswamigal.org
------------------------------------------



No comments:

Post a Comment